புதன், 19 ஆகஸ்ட், 2009

அச்சடித்த பேப்பர்


அச்சடித்த பேப்பர்


எல்லாம் அதிக பலங் கொண்டு
ஆதிக்கம் செய்யுதென்றால


அதன் பெயர் பணம்


பண்டமாற்றுக்காலத்தில்


உண்டான சிக்கல்களை


உண்மையாய் தீர்ப்பதற்கு


உருவான அலகு அது பணம்


நாகரீக மாற்றத்தால்


நாமெல்லாம் வளர்ச்சிபெற்று


நாணயத்தின் காலடியில்


நாண்டு கிடக்கின்றோம்


பொருளியல் மாற்றத்தால்


மாறுகின்ற பொருளாதாரம்


முதலாளி வர்கமென்றும்


தொழிலாளி வர்கமென்றும்


நிர்னைக்கும் சக்தியாக
நிக்கின்றான்
நிதியரசன்


காலத்தின் தேவைக்கும்
காசும்
அவசியம்தான்


காசுமேல் காதல் கொண்டு


காலத்தை மாற்றுவான் ஏன்?


பட்டு மெத்தையின் மேல்


படுத்துறங்கும் பணக்காரர்


ஒட்டுத் துணிக்காய்


ஊரெங்கும் திரிகின்ற


உள்ளங்களை எண்ணாததேன்?


உள்ளவன் தருவான் என்று


உள்ளம் வெந்துகொண்டு


ஊமையாய் வாழவேண்டாம்


உழைப்பின் உச்சத்தால்


உள்ளவனை வெண்றிடுவோம்


உலகத்தை மாற்றிடுவோம்


படைப்பு- பார்தீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக